மனிகா புகாரை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
2021-09-24@ 00:03:53

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா. அணியின் பயிற்சியாளர் சவும்யாதீப் ராய் மீது பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்திருந்தார். அதுகுறித்து விசாரிக்கப்போவதாக இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்தது.இந்நிலையில் கொரோனா பீதி காரணமாக தனிப் பயிற்சியாளரை வைத்து பயிற்சி மேற்கொள்வதாக மனிகா அறிவித்திருந்தார். ஆனால் அதை கூட்டமைப்பு ஏற்கவில்லை. அதனால் பயிற்சி முகாமுக்கு வரவில்லை என்று கூறி சமீபத்தில் அறிவிக்கபட்ட ஆசிய சாம்பியன்ஷிப் சர்வதேச போட்டிக்கான அணியில் மனிகாவை சேர்க்கவில்லை.
இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனிகா வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில், ‘இனி சர்வதேச போட்டிகளுக்கான வீரர்கள், வீராங்கனைகளை தேர்வு செய்ய தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்பதை கட்டாயமாக்க கூடாது. மேலும் கூட்டமைப்பு, பயிற்சியாளர் குறித்து மனிகா கொடுத்த புகாரை மத்திய அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதி ரேகா பள்ளி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து: 3ம் தரப்பு தலையீடு இருப்பதாக ஃபிபா நடவடிக்கை...
நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் சிமோனா, புஸ்டா சாம்பியன்
பிராண்டன் கிங் அதிரடி ஆட்டம்; வெஸ்ட் இண்டீசுக்கு ஆறுதல் வெற்றி
ஜிம்பாப்வே ஒரு நாள் கிரிக்கெட்; இந்திய அணியில் தொடக்க வீரராக களம் இறங்குகிறார் லோகேஷ் ராகுல்
நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் பைனலில் ஹுர்கஸ் புஸ்டா: ஹடாட் மயா முன்னேற்றம்
சிறப்பு அனுமதி?
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!