பவானிசாகர் அருகே ஆமை வேகத்தில் நடைபெறும் பாலம் கட்டுமான பணி: விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
2021-09-23@ 12:11:22

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே சாலையின் குறுக்கே பாலம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் கிராம மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். தாளவாடி உபகோட்டத்திற்குட்பட்ட பவானிசாகர் அருகே உள்ள முடுக்கன்துறை சந்தை முதல் தொட்டம்பாளையம் வழியாக எரங்காட்டூர் பஸ் நிறுத்தம் வரை உள்ள சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணி மற்றும் சிறு பாலங்கள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொட்டம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் உள்ள பள்ளத்தின் குறுக்கே சாலையில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. இதனால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொட்டம்பாளையம் கிராமத்திற்கு செல்ல முடியாததால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு பவானிசாகர் செல்கிறது.
தொட்டம்பாளையம் கிராம மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்துகளில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் பாலம் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அன்றாடம் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பாலம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் கட்டுமான பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழு செய்த ஆய்வு நிறைவு: இன்று அல்லது நாளை அறிக்கை தாக்கல்..!
உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் வெண்கலை சிலை; கிராம சபையில் தீர்மானம்
குடிபோதை தகராறில் விபரீதம்; மாமாவை கம்பியால் அடித்து கொன்ற மைத்துனர் கைது
கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம், மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பலி; குடும்பத்தினர் 5 பேர் படுகாயம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!