மபி.யில் மாநிலங்களவை இடைத்தேர்தல் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வேட்பு மனு
2021-09-22@ 00:51:28

போபால்: மத்தியப் பிரதேசத்தில் நடக்கும் மாநிலங்களவை எம்பி பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த ஜூலையில் ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்றார். தற்போது, அவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்பி.யாக இல்லை. மத்தியப் பிரதேசத்தில் பாஜ எம்பி.யாக இருந்த தர்வார் சந்த் கெலாட், கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக உள்ள இந்த பதவிக்கு வரும் 4ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் எல்.முருகன் போட்டியிடுகிறார்.
இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். இந்நிலையில், போபாலில் முருகன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை முதன்மை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஏபி.சிங்கிடம் அவர் தனது வேட்பு மனுவை சமர்ப்பித்தார். அப்போது, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மபி பாஜ தலைவர் விஷ்ணு தத் சர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், தனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
இம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 230. இதில், பாஜ.வுக்கு 125 இடங்கள் உள்ளன. 95 உறுப்பினர்களை கொண்ட பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், இதுவரையில் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. அது வேட்பாளரை நிறுத்தாது என்று ஏற்கனவே மறைமுகமாக கூறப்பட்டுள்ளது. எனவே, எல்.முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தல் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மனுத் தாக்கலுக்கு நாளை (இன்று) கடைசி நாள். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 27ம் தேதி. தேவைப்பட்டால் அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடத்தப்படும்,’’ என்றார்.
Tags:
L. Murugan Union Minister of State for Home Affairs by-elections MP nomination in MP மபி.யில் மாநிலங்களவை இடைத்தேர்தல் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வேட்பு மனுமேலும் செய்திகள்
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, நிர்வாக நடவடிக்கைகளால் உணவுத்துறையில் ரூ.2630 கோடி சேமிப்பு : அமைச்சர் சக்கரபாணி தகவல்.!
மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு
இரண்டு மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? மூடிய அறையில் பேசியும் முடிவெடுக்க முடியாமல் முடிந்தது அதிமுக கூட்டம்: தென் மாவட்டம், வட மாவட்டத்துக்கு தலா ஒன்று என முடிவு
31 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பேரறிவாளன் விடுதலையை கொச்சையாக விமர்சிப்பதா?...எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
பாஜ தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு: மாநிலங்களவை தேர்தலில் ஆதரவு கோரினர்
திராவிட மாடல் ஆட்சியே ஓராண்டு சாதனை : திண்டுக்கல் லியோனி பேச்சு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்