2 கட்சிகளிடம் இருந்த வந்த மாநிலங்களவை எம்.பி. பதவிகளை நிராகரித்த நடிகர் சோனு சூட்!!
2021-09-21@ 12:25:55

மும்பை : மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்குமாறு தனக்கு 2 முறை அழைப்பு வந்ததாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.கொரோனா ஊரடங்கு காலத்தில் சோனு சூட் பல வழிகளில் மக்களுக்கு பணியாற்றினார். குறிப்பாக திடீர் ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்களை பஸ், ரயில், விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு அவர் அனுப்பி வைத்த பணி இந்தியாவின் கவனத்தை ஈர்த்தது. தற்போது அவர் கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு வேலை பெற்றுத் தரும் பணிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் 4 நாட்களாக அவர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் அவர் ரூ.20 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வருமான வரி சோதனை குறித்து ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள சோனு சூட், மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்குமாறு தனக்கு 2 முறை அழைப்பு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். 2 வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்த அழைப்பை தான் நிராகரித்துவிட்டதாகவும் அரசியலில் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் தாம் கூறிவிட்டதாக சோனு சூட் விளக்கம் அளித்துள்ளார்.மேலும், அவர் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘எனக்கு அரசியலில் சேர விருப்பமில்லை. நல்ல ஒரு அரசியல்வாதி நல்ல ஒரு தேசத்தை உருவாக்குவார். ஏற்கனவே நிறைய நல்லவர்கள் நாட்டில் உள்ளனர். ஒவ்வொருவரும் அவரவர் சித்தாந்தங்களைப் பின்பற்றுகிறார்கள். எதிர்காலத்தில் அரசியலில் இறங்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. எனது பணிகளை மேலும் சிறப்பாக செய்வேன்’ என்று கூறினார்.
Tags:
நடிகர் சோனு சூட்மேலும் செய்திகள்
மகாராஷ்டிராவில் 4 தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு: கணக்கில் வராத ரூ.390 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்..!!
2 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நீக்கிய ஒன்றிய அரசு: ஆக.31 முதல் அமல்..பயணிகள் கவலை..!!
இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா... 53 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
எல்லையில் பதற்றம்; காஷ்மீர் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்
தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்
உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: 27ம் தேதி பதவியேற்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!