வேதாரண்யம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்களை மிரட்டி ரூ.3லட்சம் வலை பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்
2021-09-19@ 01:40:04

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 லட்சம் மதிப்புள்ள வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்து நேற்றுமுன்தினம் மதியம் அதே பகுதியை சேர்ந்த அருட்செல்வன் என்ற மீனவருக்கு சொந்தமான பைபர் படகில் 4 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். மணியன் தீவு கடற்கரைக்கு கிழக்கே 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் இரவு 11 மணியளவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்கொள்ளையர் 5 பேர் படகில் வந்தனர். இதில் 2 படகுகளில் இருந்த 8 பேர் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகை சூழ்ந்துகொண்டு வாள் மற்றும் அரிவாளுடன் படகுகளில் ஏறினர்.
பின்னர் மீனவர்களை மிரட்டி படகில் அவர்களிடம் இருந்த ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி, செல்போன், 3 டார்ச் லைட் , 4 சிக்னல் லைட் உள்ளிட்ட பொருட்களை எடுத்து கொண்டும், மற்ற 3 படகில் வந்தவர்கள் 500 கிலோ எடையுள்ள ரூ.2.50 லட்சம் வலைகள் பறித்து சென்று விட்டனர். இந்த பொருட்களின் ெமாத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இந்நிலையில் நேற்று காலை சோகத்துடன் 4 மீனவர்கள் கரை திரும்பினர். இதுதொடர்பாக ஆறுகாட்டுத்துறை பஞ்சாயத்தரிடம் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து கடலோர காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
கடைக்கு சென்றபோது கடத்திச்சென்று 11-ம் வகுப்பு மாணவியை திருமணம்; போக்சோவில் வாலிபருக்கு சிறை
மதுரவாயல் மற்றும் தலைமைச்செயலககாலனி பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது; 4 கிலோ கஞ்சா பறிமுதல்.!
குழந்தைகள் முன்பு நிர்வாண போஸ்; பிரபல நடிகர் அதிரடி கைது!
வீட்டின் ஜன்னலை உடைத்து 40 பவுன் தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் கொள்ளை!
வன உயிரின சட்டத்தை மீறி கிளி ஜோசியத்தில் ஈடுபட்ட 7 பேரிடம் அபராதம் வசூல்
பட்டப்பகலில் கத்தியுடன் இளைஞரை துரத்திய மர்ம கும்பல்
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!