செம்பரம்பாக்கம் ஏரியில் விநாயகர் சிலையை கரைத்தவர் நீரில் மூழ்கி பலி
2021-09-13@ 01:29:22

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த சம்பந்தம் நகர், 3வது தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (38). எலக்ட்ரிசீயன். இவர், நேற்று மாலை தனது இரண்டு பிள்ளைகளுடன், விநாயகர் சிலையை கரைக்க செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார். பிள்ளைகள் இருவரையும் ஏரியின் 5-வது கண் மதகின் அருகே நிற்கவைத்து விட்டு, பாரதிராஜா மட்டும் ஏரியில் இறங்கி விநாயகர் சிலையை கரைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென நிலைதடுமாறிய பாரதிராஜா, விநாயகர் சிலையுடன் தண்ணீரில் கவிழ்ந்தார். நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கத் தொடங்கினார். இதனைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அவரது பிள்ளைகள் அலறினார்கள். அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து பாரதிராஜாவை மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். குன்றத்தூர் போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:
Sembarambakkam Lake Ganesha statue submerged killed செம்பரம்பாக்கம் ஏரி விநாயகர் சிலை நீரில் மூழ்கி பலிமேலும் செய்திகள்
கோவை விமானநிலையத்தில் பாஜ எம்பி சுனிதா, துக்கலுக்கு தேவேந்திர குல வேளாளர்கள் வரவேற்பு
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு வாந்தி, வயிற்றுப்போக்கால் தாய், மகன் பரிதாப சாவு 20 பேருக்கு பாதிப்பு
மயிலாடுதுறை அருகே குடிபோதையில் தகராறு விவசாயி சரமாரி வெட்டிக்கொலை; மகனுடன் மனைவி போலீசில் சரண்
பாஜவுடன் கூட்டணி வைக்கும் அதிமுக காணாமல் போய்விடும்; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு
வெள்ளப் பெருக்கால் குற்றாலம், மெயினருவியில் குளிக்க தடை பழைய குற்றாலம்; ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!