மணப்பாறை அருகே கிராவல் மண் திருடியவர்கள் போலீசை கண்டதும் ஓட்டம்-பொக்லைன், டிப்பர் லாரி பறிமுதல்
2021-09-08@ 12:06:37

மணப்பாறை : மணப்பாறை அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியவர்கள் போலீசாரை கண்டதும் வாகனங்களை விட்டுவிட்டு தப்பியோடினர். இதனால் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சத்திரப்பட்டி குளத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிச் செல்வதாக திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை சத்திரப்பட்டி குளத்திற்கு சென்றபோது ஒரு கும்பல் பொக்லைன் இயந்திரம் மூலம் கிராவல் மண்ணை டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
தனிப்படை போலீசாரை பார்த்ததும் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த அந்த கும்பல் வாகனங்களை போட்டு விட்டு அருகில் உள்ள காட்டுப்பகுதி வழியாக ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளது குறித்து மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலையடுத்து மணப்பாறை போலீசார் பொக்லைன் மற்றும் டிப்பர் லாரி ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக சீத்தப் பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
ராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்!!
கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டி
பாதாள சாக்கடை பணிகளால் மீண்டும் சேதமடைந்த ஓஎம்ஆர் சாலை: சீரமைக்க கோரிக்கை
மதுராந்தகம் ஒன்றியம் முதுகரை கிராமத்தில் சேதமடைந்த ஏரி உபரிநீர் தடுப்பணை: புதர் மண்டிய கால்வாயையும் சீரமைக்க வலியுறுத்தல்
மாமல்லபுரம் பேரூராட்சியில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சூனாம்போடு அரசு பள்ளிக்கு ரூ.15 லட்சத்தில் நவீன கழிப்பறை
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;