எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை காவல்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை
2021-09-06@ 13:47:18

சென்னை: எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை காவல்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் மிஷினில் இருந்து நூதன முறையில் கொள்ளையடித்த ஹரியானா கும்பலை சேர்ந்த 4 பேரை சென்னை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
ஆனால் இன்னும் தலைமறைவாக உள்ள மற்ற கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் சிக்கவில்லை. கைதாகி சிறையில் உள்ள அமீரர்ஸ், வீரேந்தர் ராபர்ட், நஜி முஸைன், சவுக்கத் அலி ஆகிய 4 பேரையும் காவலில் எடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 14 மாநிலங்களில் இந்த கொள்ளை கும்பல் ஏடிஎம்களில் கைவரிசை காட்டியுள்ளதால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என சென்னை காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது இந்த கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய கோரி சென்னை காவல்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழக உள்துறை அதனை விரைவில் மத்திய உள்துறைக்கு அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
கொடைக்கானலில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி துவங்கியது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: அலங்கார ரூபத்தில் நடராஜர் அருள்பாலித்தார்
கும்பகோணம் அருகே வயல் திருவிழா திருவள்ளுவரின் உருவத்தை நடவு செய்து அசத்தல்
மானாமதுரை அருகே அரிசி ஆலையில் பதுக்கிய 4.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்: உரிமையாளர் கைது
ராஜ்யசபா எம்பி பதவியை எதிர்பார்க்கவில்லை: சேலத்தில் பி.டி.உஷா பேட்டி
திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் இரும்புத்துண்டு ரயிலை கவிழ்க்க சதித்திட்டமா?: ரயில்வே போலீசார் தீவிர விசாரணை
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!