எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை காவல்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை
2021-09-06@ 13:47:18

சென்னை: எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை காவல்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் மிஷினில் இருந்து நூதன முறையில் கொள்ளையடித்த ஹரியானா கும்பலை சேர்ந்த 4 பேரை சென்னை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
ஆனால் இன்னும் தலைமறைவாக உள்ள மற்ற கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் சிக்கவில்லை. கைதாகி சிறையில் உள்ள அமீரர்ஸ், வீரேந்தர் ராபர்ட், நஜி முஸைன், சவுக்கத் அலி ஆகிய 4 பேரையும் காவலில் எடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 14 மாநிலங்களில் இந்த கொள்ளை கும்பல் ஏடிஎம்களில் கைவரிசை காட்டியுள்ளதால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என சென்னை காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது இந்த கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய கோரி சென்னை காவல்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழக உள்துறை அதனை விரைவில் மத்திய உள்துறைக்கு அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
கிணத்துக்கடவுக்கு வராமல் பாதியில் திரும்பும் தனியார் டவுன் பஸ்கள்: பயணிகள் பரிதவிப்பு
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து துவங்கியது: கடந்த ஆண்டைவிட வரத்து அதிகம்
கிராமப்புறங்களில் ரோட்டோரம் செயல்படும் அங்கன்வாடி மையங்கள்: சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ஆழியார் சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
வத்தலக்குண்டு குளிப்பட்டி மருதாநதி ஆற்றில் மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்
சாணார்பட்டி பகுதியில் பூத்து குலுங்கும் மாம்பூக்கள்: அதிக மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!