செம்பரம்பாக்கம் ஊராட்சியில் ரூ.16.24 கோடி மதிப்பில் 124 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர் நாசர் வழங்கினார்
2021-09-03@ 00:01:53

திருவள்ளுர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடைபெற்ற இலவச பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், ஒன்றிய துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தி.சரவணன், தனி வட்டாட்சியர் சுமதி, மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, ஒன்றிய கவுன்சிலர் பிரியா செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி தலைவர் சாந்தி வின்சென்ட் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு தலா 2 சென்ட் வீதம் 124 நபர்களுக்கு ரூ.16.24 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசியதாவது, இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி கோரிக்கை மனு அளித்த 124 நபர்களுக்கு இன்றைய தினம் செம்பரம்பாக்கம் ஊராட்சியில், தலா 2 சென்ட் வீதம் ரூ.16.24 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. சொன்னதை செய்கின்ற அரசாகவும், சொல்லாததையும் செய்யும் அரசாகவும் நம் தமிழக அரசு திகழ்வதினால் இதுபோன்று பட்டா வழங்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நூலக கட்டடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில் பூந்தமல்லி வட்டாட்சியர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.பாலசுப்பிரமணியன், எஸ்.அமிழ்தமன்னன், துணைத் தலைவர் கன்னியம்மாள் ருத்திரகுமார், மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Tags:
Sembarambakkam Panchayat Rs 16.24 crore 124 persons free housing lease Minister Nasser செம்பரம்பாக்கம் ஊராட்சி ரூ.16.24 கோடி 124 நபர் இலவச வீட்டுமனை பட்டா அமைச்சர் நாசர்மேலும் செய்திகள்
ராஜபாளையத்தில் அதிகாலையில் பரபரப்பு..ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ.: ரூ.80 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
ராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்!!
கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டி
பாதாள சாக்கடை பணிகளால் மீண்டும் சேதமடைந்த ஓஎம்ஆர் சாலை: சீரமைக்க கோரிக்கை
மதுராந்தகம் ஒன்றியம் முதுகரை கிராமத்தில் சேதமடைந்த ஏரி உபரிநீர் தடுப்பணை: புதர் மண்டிய கால்வாயையும் சீரமைக்க வலியுறுத்தல்
மாமல்லபுரம் பேரூராட்சியில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;