SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானலில் தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்கள் திறப்பு

2021-09-02@ 12:19:23

* சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் :  கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் பாரஸ்ட் திறக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், ெகாடைக்கானலை பொறுத்தவரை கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பார்க் உள்ளிட்ட 3 பூங்காக்கள், ஏரியில் படகு சவாரி செல்ல மட்டுமே சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

நேற்று முதல் கொடைக்கானல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், ஏரி ஆகியவை திறக்கப்பட்டன. பல மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட இத்தலங்களை நேற்று சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்