ஓ.பன்னீர்செல்வம் மனைவியின் உடல் பெரியகுளத்தில் இன்று தகனம் :அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி
2021-09-02@ 11:23:33

தேனி : மாரடைப்பால் காலமான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடல் பெரியகுளத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 67. இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம்தென்னரசு, உதயநிதிஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் நேற்று காலை மருத்துவமனைக்கு சென்று ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவருக்கு ஆறுதல் கூறினர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் நேற்று மருத்துவமனையில் ஓபிஎஸ்சை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து விஜயலட்சுமியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளம் நகர் தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டது. பெரியகுளம் நகர் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயலட்சுமியின் உடல் வைக்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, சம்பத், நத்தம்விஸ்வநாதன், செல்லூர்ராஜூ, உதயகுமார், அன்வர்ராஜா, ராஜேந்திர பாலாஜி, வீரமணி, ஜெயபால், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அஞ்சலி செலுத்தினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, பாஜ எம்எல்ஏ நயினார்நாகேந்திரனுடன் வந்து மரியாதை செலுத்தினார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இன்று காலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்சின் வீட்டிற்கு வந்து, அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவருக்கு ஆறுதல் கூறினர். திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.இறுதிச்சடங்குகளுக்கு பிறகு பெரியகுளம் வடகரையில் உள்ள நகராட்சி மயானத்தில் மதியம் 12 மணியளவில் விஜயலட்சுமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
பொதுமக்கள் சானிட்டரி நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!