பதிவுத்துறையில் 2 உதவி ஐஜிக்கள் மாற்றம்: ஒரே மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக பணியாற்றும் வேலுமணி ஆதரவாளர்
2021-08-31@ 05:47:51

சென்னை: தென் சென்னை, மதுரை வடக்கு மாவட்ட பதிவுத்துறை உதவி ஐஜிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வேலுமணியின் ஆதரவு மாவட்ட பதிவாளர் ஒருவர் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக மூர்த்தி பதவி ஏற்ற பிறகு, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில், தவறு செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதில், தென் சென்னை பதிவு மாவட்டத்தில் உதவி ஐஜியாக இருந்த ரவீந்திரநாத், மதுரை வடக்கு பதிவு மாவட்ட உதவி ஐஜியாகவும், இந்த பதவியில் இருந்த மீனாகுமாரி தென் சென்னை பதிவு மாவட்ட உதவி ஐஜியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி பிறப்பித்துள்ளார்.
அதேநேரத்தில், கோவை மாவட்ட (ஆடிட்) பதிவாளராக செல்வக்குமார் பணியாற்றி வருகிறார். இவர், அமைச்சர் வேலுமணியின் தீவிர விசுவாசி. கடந்த 10 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். பதிவுத்துறையில் பல்வேறு ஐஜிக்கள் பணியாற்றினாலும், இவரை மட்டும் மாற்ற முடியாமல் இருந்தனர்.
வேலுமணிக்கு பக்கபலமாகவும், அவரது சொத்துகளை கவனிப்பவராகவும் இவர் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அமைச்சரின் ஆதரவு இருந்ததால் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தது. இப்போதும் சில உயர் அதிகாரிகளின் துணையுடன் பணி மாறுதல் இல்லாமல் தப்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்களுக்கு பாராட்டு விழா
ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தவர் பலி
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக நாளை மறுதினம் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நெடுஞ்சாலை, ரயில்வே திட்டத்தை தொடங்கி வைக்க வரும் 26ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகாரிகள் ஆய்வு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்