காளையார்கோவில் பகுதி நெடுஞ்சாலையில் பட்டுப்போன மரங்களால் பக்.. பக்.. பயணம்
2021-08-26@ 14:10:32

காளையார்கோவில்: தஞ்சாவூர்- சாயல்குடி மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் பெரிய மரங்கள் உள்ளன. இவற்றில் காளையார்கோவிலில் இருந்து மறவமங்கலம் செல்லும் ரோட்டில் பொருசடி உடைப்பு பகுதியில் சில மரங்கள் பட்டுப்போய் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த சாலை வழியாகத்தான் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், திறந்தவெளி சிறைச்சாலைக்கு ஏராளமானோர் டூவீலரிலும், நடந்தும் சென்று வருகின்றனர்.
இந்த பட்டுப்போன மரங்களால் வாகனஓட்டிகள் ஒருவித பயத்துடனே கடந்து சென்று வருகின்றனர். எனவே மரங்கள் முறிந்து பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதனை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
சங்க பொது செயலாளர் கைது மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல்: திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு
நாய்களிடமிருந்து மயிலை காப்பாற்றிய வாலிபர்: பொதுமக்கள் பாராட்டு
ஒதப்பை கிராமத்தில் ரூ.22.50 கோடியில் விறுவிறுப்பாக நடைபெறும் உயர்மட்ட பால பணிகள்: விரைவில் திறக்க ஏற்பாடு
ஆவடி சாலையில் மின்விளக்குகள் சீரமைப்பு
சீத்தஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் 4 வருடங்களாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க கோரிக்கை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!