தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கனிம வளத்துறை துணை மேலாளர் உயிரிழப்பு: 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
2021-08-06@ 00:04:43

சென்னை: மின்கசிவு காரணமாக, தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாடு கனிம வளத்துறை துணை மேலாளர் மூச்சு திணறி உயிரிழந்தார். மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னை, திருவல்லிக்கேணி பெரிய தெருவில், பீஸ் பார்க் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு 1.20 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தீ மளமளவென 4 தளங்களில் பரவியதையடுத்து புகை மூட்டம் போல் காட்சியளித்துள்ளது. இதையடுத்து விடுதி ஊழியர்கள் எழும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் ெகாண்டு வந்து உடனடியாக தீயை அணைத்தனர்.
மேலும் விடுதியில் தங்கியிருந்த 7 பேரை தீயணைப்பு துறையினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் விடுதியின் முதல்தளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்ததால் தீப்புகையானது பரவி அனைவருக்கும் மூச்சு திணறல் ஏறப்பட்டுள்ளது.
மேலும், மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து காமராஜர் சாலையில் உள்ள கனிம வளத்துறை லிமிடெட்டில் துணை மேலாளராக பணியாற்றி வரும் மதுரை மாவட்டத்தை ேசர்ந்த அரவிந்தன் (50) என்பவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அரவிந்தன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், போலீசார் வழக்குபதிவு செய்து மின்கசிவு காரணமாக தான் தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்
ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணி, தொடர் விடுமுறை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
தாம்பரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரம் வழக்குகளில் தீர்வு: ரூ.440 கோடி பைசல்
சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள் என்ன? 17ம் தேதி முகாம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!