ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பிடிஓ அலுவலகம் முற்றுகை
2021-08-04@ 00:05:29

செய்யூர்: இந்தளூர் ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து, சித்தாமூர் பிடிஓ அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் திடீர் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் இந்தளூர் ஊராட்சியில் பெரியார் நகர், அண்ணா நகர், எம்ஜிஆர் நகர், கோட்டைபுஞ்சை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில், பழுதடைந்துள்ள தெரு மின் விளக்குகளை மாற்றி அமைக்க வேண்டும். இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் அமைத்து விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும். பெரியார் நகரில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.
வீடு கட்டுவதற்கு லஞ்சம் வாங்குவதாக கூறப்படும் ஊராட்சி செயலாளரை உடனடியாக மாற்ற வேண்டும். இருளர் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வழங்காதது என்பது உள்பட பல்வேறு பிரச்னைகளை கண்டித்து, மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த 100க்கு மேற்பட்டோர் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, ஞானபிரகாசம் ஆகியோர் பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சி செயல்பாடுகள் குறித்து புகார் மனு அளித்தனர். அதை பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Tags:
Panchayat administration denunciation PDO office siege ஊராட்சி நிர்வாக கண்டித்து பிடிஓ அலுவலகம் முற்றுகைமேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!