24 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு புகார்: குன்றத்தூர் தாசில்தார் பரிசீலிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
2021-07-27@ 00:11:42

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கேகே நகரை சேர்ந்த எம்.நடராஜன் என்பவர், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா மவுலிவாக்கத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை, அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி தலைவர் சதாசிவம் ஆக்கிரமித்துள்ளார். கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களை அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். சர்வே எண் 7/5ல் 12. ஏக்கர், சர்வே எண் 7/7ல் 12.3 ஏக்கர் நிலம் மட்டுமல்லாமல் மானிய பூதான இயக்க நிலத்தின் அருகில் 40 ஆயிரம் சதுர அடியையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து குன்றத்தூர் தாசில்தார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கடந்த 2015 முதல் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி குன்றத்தூர் தாசில்தாரிடம் புகார் கொடுத்தேன். அதன்மீதும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வக்கீல் பி.முத்துக்குமார் ஆஜராகி, மனுதாரரின் மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட தாசில்தார் பரீசிலனை செய்வார் என கூறினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் புகார் மீது விசாரணை நடத்தி 8 வாரங்களுக்குள் குன்றத்தூர் தாசில்தார் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இருதரப்புக்கும் தாசில்தார் வாய்ப்பளித்து மனுவை பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு.: மொத்தம் 31 கிலோ தங்கத்தை தனிப்படை போலீஸ் மீட்பு
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாதனையாளர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூலிக்கும் அமைப்புகள் எவை? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
புலி பட சம்பள விவகாரம்; நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கு: வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை.! ஐகோர்ட் உத்தரவு
ரூ.161 கோடியில் 16 துணை மின் நிலையங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!