ஜெகன் அண்ணா காலனி வீடு கட்டுமான பணிகளை 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்-அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவு
2021-07-26@ 11:35:08

திருப்பதி : ஜெகன் அண்ணா காலனி வீடு கட்டுமான பணிகள் 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எம்எல்ஏ பாஸ்கர் உத்தரவிட்டார்.
திருப்பதி நகர்புற வளர்ச்சி கழக அலுவலகத்தில் ஜெகன் அண்ணா காலனி வீடு கட்டுமான பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் எம்எல்ஏ பாஸ்கர் பேசுகையில், `ஏழை மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்க முதல்வர் ஜெகன் மோகன் ஜெகன் அண்ணா காலனி திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தை சிறப்பாக முடித்து ஏழை மக்களின் முகத்தில் சந்தோஷத்தை காண வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறார். அவரின் இந்த சிறப்பான திட்டத்தை பூர்த்தி செய்யும் விதமாக நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும்.
ஜெகன் அண்ணா காலனி திட்டத்தில் நடந்து வரும் வீடு கட்டும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தரமாக 90 நாட்களுக்குள் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரம் வீடுகளுக்கு ஒரு சிறப்பு அதிகாரிகள் குழு ஏற்படுத்தி அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
ஜெகன் அண்ணா காலனி வீடு கட்டுமான பணிகளுக்கு சந்திரகிரி மண்டல சிறப்பு அதிகாரியாக திருப்பதி ஆர்டிஓ கனக நரசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது ஆலோசனையில் அனைத்து துறை அதிகாரிகளும் செயல்பட்டு பணியை சிறப்பாக முடிக்க வேண்டும். ஜெகன் அண்ணா காலனியில் அகலமான சாலைகள் மின்சார வசதி குடிநீர் வசதி சாலை விளக்குகள் பூங்காக்கள் சமுதாயக் கூடங்கள் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பசுமையான பகுதியாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!! ..
'ஆதார் - பான்' எண்ணை இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம் : வருமான வரித்துறை எச்சரிக்கை!!
மகாராஷ்டிராவில் மலரும் தாமரை.. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்பு!!
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
பில்கேட்சை சந்தித்த மகேஷ் பாபு
நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;