மணல் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவருக்கு வலை
2021-07-15@ 01:33:15

புழல்: சோழவரம் அருகே எருமைவெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக மணல் திருட்டு நடைபெறுவதாக நேற்று முன் தினம் சோழவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனையடுத்து, நேற்று முன் தினம் மாலை, சோழவரம் எஸ்எஸ்ஐ கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு ஒரு லாரியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும், மணல் அள்ளிய கூலி தொழிலாளர்கள், லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர், அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து, சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி டிரைவர் மற்றும் கொள்ளையர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். எருமைவெட்டிபாளையம், சோழவரம், காரனோடை, புதுப்பாக்கம் பகுதிகளில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் சட்டவிரோதமாக அள்ளப்படுகிறது. இவற்றை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
போலி நகைகளை அடகு வைத்து ரூ.1.84 லட்சம் அபேஸ் செய்தவர் கைது: முக்கிய குற்றவாளிக்கு வலை
வாடிக்கையாளர் போல் நடித்து பியூட்டி பார்லரில் திருடிய பெண் கைது
செல்போன் பறித்த 2 பேர் கைது
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!