வரும் 19ல் தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட தனிநபர் மசோதா தாக்கல்?: 40 மசோதா: 5 அவசர சட்டம்
2021-07-13@ 00:25:39

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதில், மக்கள் தொகை கட்டுப்பாடு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்ய பாஜ எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற பெயரில் பாஜ ஆளும் மாநிலங்களில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. அசாம், உபியில் இச்சட்டம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதல் வாரத்திலேயே, உபி மக்களவை எம்பி ரவி கிஷன் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்பி. கிரோரி லால் மீனா ஆகியோர் மக்கள்தொகை கட்டுப்பாடு, பொது சிவில் சட்டம் தொடர்பாக தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இருவரும் தங்களது தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்ய ஜூலை 24ம் தேதி வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல, பாஜ மாநிலங்களவை எம்பி. ராகேஷ் சின்காவும் மக்கள் கட்டுப்பாடு குறித்த தனிநபர் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அமைச்சர் அல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கல் செய்யப்படும் மசோதா தனிநபர் மசோதா என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பொது சிவில் சட்டம், மக்கள் தொகை கட்டுப்பாடு இரண்டுமே சர்ச்சைக்குரியவை என்பதால், இதற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பும். மழைக்கால கூட்டத் தொடரை ஒட்டி நாடாளுமன்றத்தில் நடக்கும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறும். காலை 11 மணி முதல் 6 மணி வரை இரு அவைகளும் இயங்கும். கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தேவையான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு எம்பிக்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு்ள்ளது. இம்முறை கூட்டத் தொடரில் பங்கேற்க ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை. கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் மட்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
'மக்களவை எதிர்க்கட்சி தலைவர் யார்?'
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருந்து வருகிறார். இவர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்பதவியில் ராகுல் காந்தி நியமிக்கப்படுவார் என முதலில் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இது மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஜி-23 தலைவர்கள் எனப்படும் சில மூத்த தலைவர்களில் யாருக்காவது இப்பொறுப்பு தரப்படும் என தெரிகிறது. இப்போட்டியில் சசிதரூர், மணிஷ் திவாரி, கவுரவ் கோகாய், ரவ்னீத் சிங் பிட்டு, உத்தம் குமார் ரெட்டி ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.
Tags:
மழைக்கால கூட்டத் தொடர்மேலும் செய்திகள்
ராகுலுக்கு அரசு பெரிய மனதை காட்டியிருக்க வேண்டும்
எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
ராகுலுக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனைக்கு தடைபெறாதது ஏன்?: பாஜ கேள்வி
2 ஆண்டு சிறை… எம்பி பதவி பறிப்பு என்னவாகும் ராகுலின் அரசியல் எதிர்காலம்?: 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்
பிறந்த நாளில் உருக்கம் நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் காதல் கடிதம்
ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கிய ஊழல் சிபிஐ அலுவலகத்தில் தேஜஸ்வி ஆஜர்: சகோதரியிடமும் விசாரணை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி