கிளன்ராக் ஆதிவாசி காலனிக்கு தார்சாலை அமைக்க கோரிக்கைகிளன்ராக் ஆதிவாசி காலனிக்கு தார்சாலை அமைக்க கோரிக்கை
2021-06-25@ 12:56:16

பந்தலூர் : பந்தலூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரமுள்ள கிளன்ராக் வனப்பகுதியில் காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த 11 ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் தனியார் தேயிலை, காபி தோட்டங்களும் செயல்பட்டு வருகின்றது. பந்தலூரில் இருந்து அப்பகுதிக்கு செல்வதற்கு குண்டும் குழியுமாக உள்ள மண் சாலையை மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், மழைக்காலங்களில் சாலையில் மண் சரிவுகள் ஏற்பட்டும், மழைநீர் தேங்கி நிற்பதால் சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. கிளன்ராக் ஆதிவாசி காலனிக்கு செல்லும் மண் சாலையை மாவட்ட நிர்வாகம் தார்சாலையாக அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து இப்பகுதிக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கோவை விமானநிலையத்தில் பாஜ எம்பி சுனிதா, துக்கலுக்கு தேவேந்திர குல வேளாளர்கள் வரவேற்பு
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு வாந்தி, வயிற்றுப்போக்கால் தாய், மகன் பரிதாப சாவு 20 பேருக்கு பாதிப்பு
மயிலாடுதுறை அருகே குடிபோதையில் தகராறு விவசாயி சரமாரி வெட்டிக்கொலை; மகனுடன் மனைவி போலீசில் சரண்
பாஜவுடன் கூட்டணி வைக்கும் அதிமுக காணாமல் போய்விடும்; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு
வெள்ளப் பெருக்கால் குற்றாலம், மெயினருவியில் குளிக்க தடை பழைய குற்றாலம்; ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!