ரயிலில் தமிழர் அன்பாக தந்த பரிசு 2 மாமரம், 7 மாம்பழங்களுக்கு 4 காவலர், 6 நாய் பாதுகாப்பு: கிலோ விலை 2.70 லட்சம் என்றால் சும்மாவா...
2021-06-19@ 01:27:02

போபால்: மத்தியப் பிரதேசத்தில் 2 மாமரங்களில் காய்த்துள்ள விலை உயர்ந்த 7 பழங்களை திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு 4 காவலர்கள், 6 நாய்கள் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபால்பூரை சேர்ந்தவர் சங்கல்ப் பரிஹார். இவர் தன்னுடைய தோட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் 2 மாமரக் கன்றுகளை நட்டார். பின்னர்தான், அதில் காயத்த மாங்காய்கள் வித்தியாசமான நிறத்தில் முழுமையாக ரூபி வண்ணத்தில் இருந்தன. அதன் பிறகுதான் அவை ஜப்பானின் ‘மியாசாகி’ வகையை சேர்ந்த அரியவகை மாம்பழங்கள் என்பது தெரிய வந்தது. இந்த மாம்பழங்கள் உலகின் மிக விலை உயர்ந்தவை. இவை சர்வதேச சந்தையில் கடந்தாண்டு ஒரு கிலோ ரூ.2.70 லட்சத்துக்கு விற்பனையானது.
கடந்தாண்டு தோட்டத்தில் காய்த்த மாம்பழங்களை சில திருடர்கள் தோட்டத்தில் புகுந்து திருடி சென்றனர். பின்னர், இந்த மாம்பழத்தின் கொட்டைகளை பதப்படுத்தி, தங்கள் தோட்டங்களில் வளர்க்கத் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தோட்டத்தில் உள்ள இரண்டு மரங்களையும், காய்களையும் பாதுகாக்க சங்கல்ப் முடிவு செய்தார். தற்போது, இரண்டு மரங்களிலும் 7 மாங்காய்கள் காய்த்துள்ளன. எனவே, இதனை பாதுகாப்பதற்காக 4 காவலர்கள், 6 நாய்களை பாதுகாப்பு பணியில் அமர்த்தியுள்ளார். இந்த மரங்கள் கிடைத்தது பற்றி சங்கல்ப் கூறுகையில், ‘‘சில ஆண்டுகளுக்கு முன் மரக்கன்றுகளை வாங்குவதற்காக சென்னைக்கு சென்றபோது ரயிலில் ஒருவர் இந்த மரக்கன்றுகளை கொடுத்தார். இதை உனது குழந்தைகளை போல் வளர்க்க வேண்டும் என்று சொன்னார்.
ஆனால், அவை அரியவகை என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. இது காய்க்க தொடங்கிய பிறகுதான், அதன் மகிமை தெரிந்தது. இது அரியவகையாக இருந்ததால், இந்த மாம்பழத்துக்கு எனது தாயான டாமினியின் பெயரை சூட்டினேன். பின்னர்தான் அது மியாசாகி பழங்கள் என்பது தெரிந்தது,’’ என்றார்.
இந்த மாம்பழம் 300 கிராம் வரை உள்ளது. மும்பை நகை வியாபாரி ஒருவர், இதை கிலோ ரூ.21 ஆயிரத்துக்கு வாங்க முன்வந்துள்ளார். ஆனால், இந்த பழங்களை விற்காமல் பாதுகாத்து, அதை மரமாக வளர்க்க திட்டமிட்டு இருப்பதாக சங்கல்ப் தெரிவித்தார்.
* மியாசாகி மாம்பழத்தில் உடலில் உள்ள மாசுக்களை தூய்மைப்படுத்தும் ஆன்டிஆக்சிடன்டுக்கள் அதிகமாக இருக்கின்றன.
* பீட்டா கரோட்டின், போலிக் அமிலமும் நிறைந்து காணப்படுகின்றன. இவை, கண்பார்வைக்கு மிகவும் நன்மை பயக்கும்.
* ஜப்பானின் மியாசாகி நகரம்தான் இந்த மரத்தின் பூர்வீகம். அதனால்தான், இது மியாசாகி பெயரில் அழைக்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
அன்னைத் தமிழ் நிலத்திற்குப் பெயரை மீட்டளித்தவரின் நினைவாக என்றும் மிளிர்கிறது நம் தமிழ்நாடு: அண்ணா நினைவு நாளையொட்டி கனிமொழி எம்பி ட்வீட்
17ம் தேதி திறக்கப்பட இருந்த நிலையில் புதிய தலைமைச்செயலகத்தில் தீ விபத்து: தெலங்கானாவில் அதிகாலை பரபரப்பு
கேரள பட்ஜெட் இன்று தாக்கல் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அதானி விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைப்பு
இடைத்தேர்தலை அறிவிக்க 6 மாதம் அவகாசம் இருந்த போதிலும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அவசர அவசரமாக அறிவித்தது ஏன்?: அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
பிபிசி ஆவணப்பட வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!