விம்பிள்டன், ஒலிம்பிக்ஸ் விலகினார் ரபேல் நடால்
2021-06-18@ 00:40:09

மாட்ரிட்: விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் ரபேல் நடால் அறிவித்துள்ளார். பிரெஞ்ச் ஓபனில் 13 முறை சாம்பியன் பட்டம் வென்ற சாதனையாளரான நடால், இந்த ஆண்டு அரை இறுதியில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சிடம் தோற்று வெளியேறினார். கிராண்ட் ஸ்லாம் வேட்டையில் தலா 20 பட்டங்களுடன் நடால், பெடரர் சமநிலை வகிக்க, ஜோகோவிச் (19) அடுத்த இடத்தில் உள்ளார். இந்நிலையில், இந்த மாத இறுதியில் தொடங்கும் விம்பிள்டன் மற்றும் அடுத்த மாதம் 23ம் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் இருந்து விலகுவதாக நடால் நேற்று அறிவித்தார். தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதால் உடல் சோர்வடைந்துள்ள நிலையில் ஓய்வு தேவைப்படுவதாகவும், இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாட இது மிகவும் அவசியம் என கருதுவதால் விம்பிள்டன், ஒலிம்பிக்சில் இருந்து விலக முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சன்ரைசர்ஸ் நிதான ஆட்டம் பஞ்சாப் கிங்சுக்கு 158 ரன் இலக்கு
தெ.ஆப்ரிக்கா, இங்கி.க்கு எதிரான இந்திய அணிகள் அறிவிப்பு
சில்லி பாய்ன்ட்...
இன்று முதல் ஜகர்தாவில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடக்கம்
கடைசி போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி; கேப்டன் ரோஹித்சர்மா பேட்டி
கொல்கத்தாவில் நாளை மறுதினம் முதல் குவாலிபயர்; குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்