கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவேண்டும்; ஜி.கே.வாசன்
2021-06-14@ 17:14:40

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஏப்ரல் மாதம் விற்கப்பட்ட, மணல், ஜல்லி, கம்பியின் விலை, இந்த ஜூன் மாதம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 370 ரூபாய்க்கு விற்ற சிமென்ட் தற்போது 520 ரூபாய்க்கும் எம்.சாண்ட் ஒரு யூனிட் 5000 ரூபாயில் இருந்து 6000 ரூபாயாகவும் ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட் 3,400 ரூபாயில் இருந்து 3,900 ரூபாயாகவும் கட்டுமான கம்பி ஒரு டன் 68 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஒரு லோடு செங்கல் 18 ஆயிரத்தில் இருந்து 24 ஆயிரமாக உயர்ந்துள்ளது. விலை உயர்வால் சிறிய, பெரிய கட்டுமான நிறுவனங்களும் சொந்தமாக வீடுகட்டுபவர்களும் தற்காலிகமாக வேலையை நிறுத்தி வைத்துள்ளனர்.
கொத்தனார், சிற்றாள், கம்பிகட்டுனர், உதவியாளர்கள், போன்றோர் வேலையில்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கட்டுமான நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே பேசி நிர்ணயம் செய்த விலைக்கு விற்க முடியாமலும் குறித்த நேரத்தில் வீடுகளை கொடுக்க முடியாமலும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சாதாரண மக்களும் விலையேற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே தமிழக அரசு உடனடியாக கட்டுமான விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உயர்கல்வியில் திமுக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மலபார் கோல்டு டைமண்ட்ஸில் இந்தியாவிலேயே குறைந்த விலையில் தங்கம் விற்பனை
திருப்பதியில் கங்கனா தரிசனம்
தசாவதாரம் 2ம் பாகம் உருவாக்கவே முடியாது: சொல்கிறார் கே.எஸ்.ரவிகுமார்
பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன்
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!