சொகுசு காரில் ஜாலியாக வந்து ஆடு, கோழிகள் திருடிய தம்பதி பிடிபட்டனர்: மூன்றாவது கண் மூலம் சிக்கினர்
2021-06-14@ 15:42:56

ஆவடி: சொகுசு காரில் ஜாலியாக வந்து ஆடு, கோழிகள் திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். சென்னை பாடி, ஜெகதாம்பிகை நகர், வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் பூபாலன்(37). இவர் அந்த பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 29ம் தேதி இரவு கடைக்கு வெளியே கூண்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 15 கோழிகளுக்கு தீவனம் வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது கூண்டின் பூட்டு உடைக்கப்பட்டு 15 நாட்டுக் கோழிகள் திருடப்பட்டிருப்பது தெரிந்தது. இதுபோல் கொரட்டூர், போத்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்த இந்திரா(56) என்பவர் வீட்டில் கடந்த மாதம் 2ம் தேதி இரவு இரண்டு ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்படி, கொரட்டூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, ஒரு சொகுசு காரில் ஆணும் பெண்ணும் கைக்குழந்தையுடன் வந்து ஆடு, கோழிகளை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை கொரட்டூர் 200 அடி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, திருட்டில் ஈடுபட்ட கார் வந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த காரை போலீசார் மடக்கி சோதனை நடத்தியதில், ஒரு ஆணும் பெண்ணும் கைக்குழந்தையுடன் இருந்தனர். அவர்களை காருடன் கொரட்டூர் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரித்ததில், ‘இவர்கள்தான் கோழி, ஆடுகளை திருடியவர்கள் என்பதும் சென்னை ஈக்காட்டுதாங்கல், சுந்தர் நகர், 6வது தெருவில் சேர்ந்த அஷ்ரப் (38), அவரது மனைவி லெட்சுமி(36) என்று தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆடு, கோழிகளை பறிமுதல் செய்தனர். இதுபோல் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னையில் பெண்ணிடம் ரகளை செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: மூதாட்டியை வெட்டி படுகொலை செய்த இளைஞர் கைது
நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி அமெரிக்காவில் இருந்தபடியே கொள்ளையரை விரட்டிய வக்கீல்: திண்டுக்கல் வீட்டிற்குள் புகுந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்
புதுக்கோட்டை அருகே கணவருடன் தகராறில் 2 குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய் கைது
கம்பம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பேரன், மருமகளை தீவைத்து எரித்த மாமனார் கைது: குழந்தை சாவு; மருமகள் உயிர் ஊசல்
சாலை தடுப்புச்சுவர் அமைக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
நிலக்கோட்டை அருகே மீன் விற்ற தகராறு கிராமத்தில் புகுந்து கூலிப்படை தாக்குதல்: பெட்ரோல் குண்டு வீச்சு; 5 பேருக்கு அரிவாள் வெட்டு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!