தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்: சைபர் க்ரைம் உதவியுடன் மர்ம நபருக்கு போலீஸ் வலை
2021-06-14@ 00:54:34

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் வெடித்து சிதறும்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். மர்ம நபரின் பேச்சால் அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்படி சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வந்த, வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வந்த போலீசார் வீடு முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேல் சோதனை செய்தனர். இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து விருகம்பாக்கம் போலீசார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து காவல் கட்டுப்பட்டு அறைக்கு மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Temujin leader Vijayakandh home bomb threat cyber crime help mysterious person police web தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் சைபர் க்ரைம் உதவி மர்ம நபருக்கு போலீஸ் வலைமேலும் செய்திகள்
நாங்குநேரியில் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த 4 பேர் சிக்கினர்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு எழுத பாஜ மாவட்ட தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது
நெய்வேலியில் பயங்கரம் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.11.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: அங்கோலா பெண் கைது
தனியார் நகை கடன் வழங்கும் வங்கியில் ஊழியர்களை கட்டி போட்டு ரூ.20 கோடி நகைகள் கொள்ளை
கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!