மயிலாடுதுறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த வாலிபர் கைது
2021-05-29@ 00:55:16

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவை மரக்கடை சந்தன்தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் முகமது ஆசிக்(30). ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த இவர், கோவையில் கடந்த 2018ம் ஆண்டு மத மோதலை உருவாக்குவதற்காக திட்டம் தீட்டியதாக, தேசிய புலனாய்வு துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்த வழக்கு சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஜாமீனில் வெளிவந்த முகமது ஆசிக், மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு கோழி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கோர்ட்டில் ஆஜராகும்படி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பலமுறை முகமது ஆசிக்குக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனையடுத்து பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மயிலாடுதுறை வந்தனர். பின்னர் மயிலாடுதுறை போலீசார் உதவியுடன் நீடூரில் தங்கியிருந்து முகமது ஆசிக்கை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து சென்றனர்.
மேலும் செய்திகள்
காரில் கடத்தி வந்த ரூ.1 கோடி குட்கா பறிமுதல் : சிறுவன் உள்பட 6 பேர் கைது
மாணவி மீதான காதல் மோகத்தால்; கூடுவாஞ்சேரி அருகே அரசு பள்ளி மாணவர்கள் கோஷ்டி மோதல்: சாலையில் சரமாரி அடிதடி: வீடியோ வைரலால் பரபரப்பு
ரூ.1 கோடி பாக்கி பிரச்னையில் பயங்கரம் கிராமத்துக்கு வரவழைத்து நெல் வியாபாரி கொலை: மற்றொரு வியாபாரி கைது
அற்புதம்... அம்மா..!ஒரு தாயின் 31 ஆண்டு கண்ணீர் போராட்டம்
வீட்டை உடைத்து 40 சவரன் கொள்ளை
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!