என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
2021-05-28@ 18:41:10

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி தொழிலாளர்கள் கொரோனா தொற்று காரணத்தால் 50 சதவீதம் தொழிலாளர்களை மட்டுமே பணியில் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பணியை புறக்கணித்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சியில் முதலாவது சுரங்க விரிவாக்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளிகள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நெய்வேலி நகர் பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் என்எல்சி தொழிலாளர்கள் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் என தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
ஆனால் என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளர்களை என்எல்சி நிர்வாகம் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என கூறியுள்ளது.
இந்நிலையில், நேற்று பணிக்கு வந்த அனைத்து தொழிலாளர்களும் பணியை புறக்கணித்து சுரங்க நுழைவு வாயிலில் வெளியே நின்றனர். அங்கு வந்த என்எல்சி அதிகாரிகள் தொழிலாளர்களிடம் பேச்சு நடத்தினர். என்எல்சி சுரங்க பகுதிகளில் தங்களுடன் பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளிகள், அதிகாரிகளுக்கு மட்டும் இரண்டு நாட்கள் பணிக்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை என்எல்சி நிர்வாகம் கொடுத்துள்ளது. இதே போன்று தங்களுக்கு வழங்க வேண்டும். கொரோனா பரவல் காரணமாக 50 சதவீதம் தொழிலாளர்களை மட்டுமே பணிக்கு அழைக்க வேண்டும் என ஒப்பந்த தொழிலாளர்கள் கூறினர். இது குறித்து நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகள்
மதுரையில் ஆவணம் இன்றி யானை வளர்த்த நபர்... போராடி மீட்ட வனத்துறை: திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா ெதாடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
குன்னூரில் நாளை பழக்கண்காட்சி: அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
தேவதானப்பட்டி பகுதியில் கனமழை; சூறைக்காற்றுக்கு வாழை, வெற்றிலை கொடிக்கால் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை: கிடங்கு அமைத்து தர கோரிக்கை
‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ போட்டி: வெற்றி பெற்ற குயின் ஸ்பிரிட் குதிரைக்கு ரூ.21 லட்சம் பரிசு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!