நிதானம் தேவை பன்ட்: கபில்தேவ் அட்வைஸ்
2021-05-27@ 17:27:07

மும்பை: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், கூறுகையில், “ரிஷப் பன்ட் அணிக்குள் வந்ததிலிருந்து முதிர்ச்சியுடன் விளையாடுகிறார். முன்னணி பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு கடினமான ஷாட்களைகூட மிக சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம்.
ஆனால், இங்கிலாந்தில் அப்படி விளையாட முடியாது. இங்கிருக்கும் காலநிலை வேறு. தொடர்ந்து அதிரடி காட்ட நினைத்தால் விரைவில் பெவிலியன் திரும்பும் நிலை ஏற்படும். இதனால், அவர் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். ரோஹித் ஷர்மாவும் இப்படிதான் அதிரடியாக விளையாட நினைத்து ஆட்டமிழந்துவிடுவார். டெஸ்டை பொறுத்தவரை நிதானம்தான் முக்கியம். ரிஷப் பன்ட் அதனை கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
இங்லிஷ் பிரிமீயர் லீக் மான்செஸ்டர் சிட்டி சாம்பியன்
குவாலிபயர் 1ல் இன்று குஜராத்- ராஜஸ்தான் மோதல்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒசாகாவை வீழ்த்தினார்
சில்லி பாயின்ட்...
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது
ஐபிஎல் 2022 சீசனின் Fastest Delivery Of Match விருதினை பெற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை