வெளி மாநிலத்தில் இருந்து திருவொற்றியூர் வந்து சேர்ந்தது 90 மெட்ரிக் டன் ஆக்சிஜன்
2021-05-20@ 00:17:12

சென்னை: தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால் தமிழகத்திற்கு தேவைப்படும் ஆக்சிஜன் வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று திருவொற்றியூர் கான்கார் யார்டுக்கு அரியானா மாநிலத்திலிருந்து 60 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்ட டேங்கர் லாரி ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 30 மெட்ரிக் டன் ஆக்சிஜன் டேங்கர் லாரி ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. மொத்தம் 90 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்தது. இதனை அதிகாரிகள், ராஜிவ்காந்தி, ஓமந்தூரார், மதுரை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தினமும் தமிழகத்துக்கு வெளி மாநிலத்திலிருந்து தேவையான ஆக்சிஜன் வாங்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
உயர்த்தியதில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா?.. ஒன்றிய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் கேள்வி
சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்களுக்கு பாராட்டு விழா
ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தவர் பலி
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக நாளை மறுதினம் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்