கோவை ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையில் மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
2021-05-04@ 16:27:38

கோவை: கோவை ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையில் மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்ததாக கோவையில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அங்குள்ள பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளும் அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள ஆக்சிஜன் ஆலையில் மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஆக்சிஜன் தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்படும் நிலை உள்ளது. குறிப்பாக கேரளா, பெங்களூரு மற்றும் பெருந்துறையிலிருந்து தினமும் 14 டன் திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது 4 முதல் 5 டன் மட்டுமே அனுப்பப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் குணமடைபவர்களை விட தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே அங்குள்ள பலர் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த ஆலையிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டால் மேலும் நெருக்கடியான சூழல் ஏற்படும் நிலை உள்ளது. இதேபோல் நாகை மாவட்ட மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
Tags:
ஆக்சிஜன்மேலும் செய்திகள்
ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமி கைவரிசை பிரபல பொருட்கள் டெலிவரி மையத்தில் ரூ.2.35 லட்சம் திருட்டு: முசிறியில் நள்ளிரவில் பரபரப்பு
விடுதலையானார் பேரறிவாளன்.. ஆனந்த கண்ணீரில் குடும்பம்... பேரறிவாளனுக்கு இனிப்புகள் ஊட்டி தாய், தந்தை, உறவினர்கள் நெகிழ்ச்சி!!
சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: ஆபத்தான முறையில் பாலத்தைக் கடக்கும் வாகன ஓட்டிகள்
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
சிதம்பரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை : திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் விபரீத முடிவு!!
இலங்கையில் பெட்ரோல், டீசல் கையிருப்பு காலி : இந்தியா 4 லட்சம் டன் டீசலை அனுப்பி உதவி; தமிழக அரசு சார்பிலும் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!