பாரத் உயர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில் புதுமை கண்டுபிடிப்பு தின நிகழ்ச்சி
2021-04-11@ 00:02:19

சென்னை: பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவித்து தொழில் முனைவோர்களாக மேம்படுத்தும் வகையில் புதுமை கண்டுபிடிப்பு தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் ஜெ.சந்தீப் ஆனந்த் முன்னிலை வகித்தார். கூடுதல் பதிவாளர் ஹரி பிரகாஷ் வரவேற்றார். துணை வேந்தர் (பொறுப்பு) விஜய பாஸ்கர் ராஜூ ஆண்டறிக்கை வாசித்தார். இணை வேந்தர் சுந்தரராஜன் கல்வி நிறுவனத்தின் படைப்புகள், காப்புரிமைகள், தரம் குறித்து விளக்கினார். பதிவாளர் பூமிநாதன் படிப்பு வாரியாக மாணவர்கள் பெற்ற விருதுகளை பட்டியலிட்டார்.
பப்புவா நியூ கினியா நாட்டின் அமைச்சர் சசிந்திரன் முத்துவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு கல்வி நிறுவனம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து பாரத் கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும், பாரத் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய ஐசியு பிரிவையும் திறந்து வைத்து, சசிந்திரன் பேசுகையில், “தொழில்முனைவோரை எங்கள் நாட்டுக்கு வரவேற்கிறேன். நீங்கள் அங்கு வந்து தொழிற்சாலைகளை தொடங்க ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன” என்றார். பாரத் கல்வி நிறுவனத்தின் கண்டுபிடிப்பு மற்றும் மேம்படுத்தும் மையத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: திருநெல்வேலி வாலிபர் கைது
பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
16 நகராட்சி ஆணையர்கள் இட மாற்றம்
திரைப்படங்களில் சண்டை காட்சிகள் வரும்போது ஆயுதங்கள், ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகம் இடம்பெற உத்தரவிட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: 7 பக்க குற்றப்பத்திரிகை தயார்
தமிழகத்தில் 16 நகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!