திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்
2021-04-09@ 01:22:08

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும், வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை வெளியீடு போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். இந்நிலையில் அவருக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்தது. நேற்று முன்தினம் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். கொரோனா பரிசோதனையும் எடுத்துக்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏற்கனவே, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
DMK General Secretary Thuraimurugan Corona home loneliness திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா வீட்டில் தனிமைமேலும் செய்திகள்
கோயில் திருவிழா நடத்தலாம் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது: பாஜ தலைவர் எல்.முருகன் சொல்கிறார்
புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் 3 சிசிடிவி கேமராக்கள் பழுது: திமுக வேட்பாளர் புகார்
அதிமுகவினர் திடீர் மாயம் கொமதேக ஈஸ்வரன் சந்தேகம்
ஓட்டு எண்ணிக்கை ஏஜென்டுகளை மண்டபத்தில் தங்க வைக்க வேண்டும்: அதிமுகவினருக்கு முதல்வர் உத்தரவு
சொல்லிட்டாங்க...
சீருடைப்பணியாளர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!