கொத்து கொத்தாக பரவும் கொரோனா: நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு பாதிப்பு உறுதி: கட்டுப்பாட்டை தீவிரப்படுத்திய மாநகராட்சி
2021-04-08@ 14:45:08

நெல்லை: நெல்லை மாவட்டம் பேட்டை செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பேட்டை செந்தமிழ் நகரில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு உள்ள நபர்களின் தெருக்களை அடைக்கும் பணியும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 2 டாக்டர்கள் உள்பட 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 15 ஆயிரத்து 816 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றும் 14 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் 444 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 217 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் பேட்டை, செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வேளச்சேரி தொகுதி 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு 548 பேரில் 186 பேர் மட்டுமே வாக்களிப்பு: கடந்த முறை 220 பேர் வாக்களித்தனர்
போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்து 22 ஆண்டுகள் பணியாற்றிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து மங்களூரு கடலில் மேலும் 3 மீனவர் உடல்கள் மீட்பு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
மேகாலயா முன்னாள் ஆளுநருக்கு கொரோனா கோவையில் சிகிச்சை
திருத்துறைப்பூண்டி தாலுகா கொள்முதல் நிலையத்தில் 20,000 நெல் மூட்டைகள் சேதம்: மழையில் நனைந்து வீணானது
தஞ்சையில் நாயக்கர் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!