தேர்தலையொட்டி 3 நாள் டாஸ்மாக் விடுமுறை எதிரொலி மது பதுக்கிய 4 பேர் கைது 240 பாட்டில்கள் பறிமுதல்-முத்துப்பேட்டை பகுதியில் போலீசார் அதிரடி
2021-04-05@ 14:26:27

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை பகுதியில் 3 நாள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலியாக பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 240 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைதாயினர்.நாளை (6ம்தேதி) நடைபெற இருக்கிற தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும், நேற்று முதல் 3 தினங்கள் விடுமுறை அளிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் விடுமுறையை சாதகமாக பயன்படுத்தி அனுமதியில்லாமல் கூடுதல் விலைக்கு விற்க முத்துப்பேட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையிவட போலீசார் நேற்று முன்தினம் இரவு முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை, மங்கலூர், செங்காங்காடு, கோவிலூர் ஆகிய பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் தம்பிக்கோட்டை எம்.கே. நகர் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் அருண் பாண்டியன்(30), மங்கலூர் கணேசன் மகன் மாரிமுத்து(40) செங்காங்காடு வைரப்பன் மகன் இந்திரன்(55), கோவிலூர் வடகாடு வீராச்சாமி மகன் வீரமணி(35) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 240 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் செய்திகள்
சிசு உயிரிழப்பை பூஜ்யநிலைக்கு கொண்டுவர வலியுறுத்தல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விருத்தாச்சலம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ஆற்றில் வீசிய நபர்: கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி