திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து டி.ஆர்.பாலு எம்பி வாக்குசேகரிப்பு
2021-04-01@ 07:34:48

அம்பத்தூர்: அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும், அம்பத்தூர் வடக்கு பகுதி செயலாளருமான ஜோசப் சாமுவேலை ஆதரித்து திமுக பொருளாளரும், பெரும்புதூர் தொகுதி எம்.பியுமான டி.ஆர்.பாலு அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 89வது வார்டில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக வாக்குசேகரித்தார். அப்போது, டி.ஆர்.பாலு எம்.பி பேசியதாவது, “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அம்பத்தூர் தொகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீடுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கொரோனா நிவாரண தொகையாக, ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைக்கும் தலா ₹4 ஆயிரம் வழங்கப்படும். எனவே, நீங்கள் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு வாக்களிக்க வேண்டும்,” இவ்வாறு அவர் பேசினார்.
இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பி.கே.மூர்த்தி, பகுதி செயலாளர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், எம்.டி.ஆர் நாகராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் தொ.மு.ச மோகன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் சாந்தகுமாரி, பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் என்ற நீலகண்டன், வட்ட செயலாளர்கள் எம்.இ.சேகர், பிரகாஷ், டிக்கா, சீனிவாசன், லோகநாதன், நெப்போலியன், சுந்தர்ராஜ், விஜயகுமார், சண்முகம், லால், கமல், கண்ணபிரான், நவராஜ்ரவி, ரகு, ராதாகிருஷ்ணன் மற்றும் ஆசைராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
முதலமைச்சரின் உரையை விமர்சிப்பது அண்ணாமலையின் அரைவேக்காட்டுத்தனம்” -சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டம்..!
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்: அண்ணாமலை பேச்சுக்கு துரை வைகோ பதிலடி
சொல்லிட்டாங்க...
ஐதராபாத்தில் மோடி பேச்சு தெலங்கானாவில் ஆட்சி இனிதான் ஆட்டம் ஆரம்பம்
மாநிலங்களவை வேட்பாளர் யார்? சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு
பிரதமரின் வருகையால் தமிழகத்துக்கு பல நன்மை கிடைக்கப்போகிறது: தமிழக பாஜ தலைவர் அறிக்கை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!