ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் வாக்குசேகரிப்பு
2021-03-29@ 00:27:58

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று காலை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவிலிருந்து பிரசாரத்தை தொடங்கினார். அப்போது காசி தோட்டம், பெண்டில்மென் கார்டன், வாத்தியார் ஏகப்பன் தெரு, ஏ.ஜெ.காலனி, கொடிமர சாலை, சேவியர் தெரு, இந்திரா காந்தி நகர், ஜி.எம்.பேட்டை, திரௌபதி கோயில் தெரு, துரை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மீனவர் நலனை பொறுத்தவரை, இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு வசதிகள் செய்து கொடுத்து உள்ளேன். சமீபத்தில் கூட மீன் விற்பனை செய்பவர்கள் மழை, வெயிலில் மீன் விற்பனை செய்ய வேண்டியுள்ளது என்பதற்காக, மீன்பிடி துறைமுகத்தில் சர்வதேச தரத்தில் ஒரு மீன் மார்கெட் கட்டிக்கொடுத்துள்ளேன்.
தற்போது ரூ.155 கோடி செலவில் மீன்பிடி துறைமுகத்தில் மேலும் பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் மீன்பிடி துறைமுகத்தில், மேலும் 200 முதல் 300 மீன்பிடி படகுகள் நிறுத்த முடியும். இதேபோல், மீனவர் நலவாரியம் மூலம் கடந்த ஆண்டு ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் ரூ.1000 வீதம் மூன்று முறை மொத்தம் ரூ.3000 வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை மொத்தம் ரூ.19,000 ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்னதாகவே கொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன்,” இவ்வாறு அவர் பேசினர்.
Tags:
Rayapuram constituency Minister Jayakumar polling ராயபுரம் தொகுதி அமைச்சர் ஜெயக்குமார் வாக்குசேகரிப்புமேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் ஓ. பன்னீர்செல்வம்
உச்சநீதிமன்றத்தில் 30ம் தேதி இரட்டை இலை வழக்கு விசாரணை எடப்பாடி, ஓபிஎஸ் அவசர ஆலோசனை: நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே வேட்பாளரை அறிவிக்க இருவரும் முடிவு
சொல்லிட்டாங்க...
வரும் 30ம் தேதி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் கட்சி இணைப்பு? சமூக வலைதள பதிவால் பரபரப்பு
மருத்துவத்துறையில் காலியாக உள்ள இயக்குனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேமுதிக பொறுப்பாளர்கள் விஜயகாந்த் அறிவிப்பு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!