அமராவதி நில முறைகேடு வழக்கு!: சந்திரபாபு நாயுடு 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிஐடி நோட்டீஸ்..!!
2021-03-16@ 14:20:08

ஹைதராபாத்: அமராவதி நில முறைகேடு வழக்கில், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கும் ஆந்திர மாநிலத்தின் குற்ற புலனாய்வுத்துறை, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வரும் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அம்மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்க திட்டமிட்டார். தலைநகர் அமராவதியை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தினார். ஆனால் கடந்த ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்தவுடன் அமராவதி திட்டத்தை ரத்து செய்து புதிதாக 3 தலைநகரங்களை அமைக்க திட்டமிட்டார்.
புதிய தலைநகரை உருவாக்க நிலம் கையகப்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வருகின்ற 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சந்திரபாபு நாயுடுக்கு சிஐடி நோட்டீஸ் வழங்கியுள்ளது. விசாரணைக்காக சிஐடி அலுவலகம் வருமாறு ஹைதராபாத்தில் உள்ள சந்திரபாபு வீட்டிற்கு சென்று சிஐடி-யின் இரண்டு சிறப்பு குழு நோட்டீஸ் வழங்கியது.
மேலும் செய்திகள்
தவறுதலாக எல்லை தாண்டிய குழந்தை: பாக். வீரர்களிடம் ஒப்படைப்பு
வெளிநாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை நன்கொடை பெறலாம்: எப்சிஆர்ஏ சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம்
6 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் துவங்கியது
சுயநலத்துக்காக பயன்படுத்த பார்க்கும் அரசியல் கட்சிகள் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும்: தலைமை நீதிபதி என்வி.ரமணா காட்டம்
பயணிகள் அலறல் 5000 அடி உயரத்தில் விமானத்தில் புகை: 15 நாளில் 5வது சம்பவம்
முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல் மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலி: சடலங்கள் மட்டுமே மீட்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்