காளையார்கோவில் காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள்: விஷப்பூச்சிகள் தங்குவதால் மக்கள் பீதி
2021-03-14@ 11:31:30

காளையார்கோவில்: காளையார்கோவில் காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக பல வழக்குகளில் பிடிபட்ட நான்கு சக்கரம் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் விஷபூச்சிகள் தங்கும் இடமாக உள்ளது என்று பகுதி மக்கள் கூறுகின்றனர். காளையார்கோவில் காளையப்பன் தெருவில் உள்ள காவல் நிலையத்தில் பல வழக்குகளில், பிடிபட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் புதர் மண்டிக் கிடப்பதினால் கொடிய விஷப்பூச்சிகள் அதிகளவு திரிகின்றன. காவல் நிலையத்தைச் சுற்றி சர்ச், காவலர்கள் குடியிருப்பு மற்றும் அதிக வீடுகள் உள்ளது பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் புதர் மண்டிக் கிடக்கும் வாகனங்களில் இருந்து இரவு நேரங்களில் விசப்பூச்சிகள் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளார்கள். மேலும் அப்பகுதியில் புதர்மண்டி கிடப்பதினால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
சமுக ஆர்வலர் கூறுகையில், காளையார்கோவில் காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுவதும் புதர் மண்டி விஷப்பூச்சிகளின் தங்கும் இதமாக உள்ளது. இரவு நேரங்களில் அப்பகுதிகளில் நடந்து செல்ல மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடங்களை
அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். காவல் நிலையத்தைச் சுற்றி சர்ச், காவலர்கள் குடியிருப்பு மற்றும் அதிக வீடுகள் உள்ளது பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் புதர் மண்டிக் கிடக்கும் வாகனங்களில் இருந்து இரவு நேரங்களில் விசப்பூச்சிகள் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது
மேலும் செய்திகள்
கவரப்பேட்டை பகுதியில் குண்டும், குழியுமான தேசிய நெடுஞ்சாலை: வாகன ஓட்டிகள் அவதி
நடிகை பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை தடயவியல்; பரிசோதனைக்கு அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
நெல்லை - மேட்டுப்பாளையம், தாம்பரம் உள்ளிட்ட 4 சிறப்பு ரயில்களை நீடிப்பு செய்ய தெற்கு ரயில்வே முடிவு: ரயில்வே வாரியத்தின் அனுமதிக்காக காத்திருப்பு
நாலுமாவடியில் நாளை மறுநாள் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை திறப்பு விழா
குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் குட்டிகளுக்கு நடைபயிற்சி அளிக்கும்; 10 யானைகள்
குழந்தை பாக்கியம் தரும் மருத்துவ குணம் வாய்ந்தது; குன்னூர் பர்லியார் பண்ணையில் துரியன் பழம் சீசன் துவங்கியது
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!