கன்னியாகுமரியில் கலெக்டர் பாராகிளைடரில் பறந்து விழிப்புணர்வு பிரசாரம்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சாகசம்
2021-03-07@ 03:18:05

கன்னியாகுமரி: தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பாராகிளைடரில் வானில் பறந்தபடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாகச நிகழ்ச்சியை நடத்த மாவட்ட தேர்தல் அலுவலகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று மாலை சாகச விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி சன்செட் பாயின்ட் கடற்கரை பகுதியில் நடந்தது.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பாராகிளைடர் மூலம் ஆகாயத்தில் பறந்தபடி ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களை பறக்க விட்டார். பின்னர் நாகர்கோவில் கோட்டாறு சமரசவீதியை சேர்ந்த பள்ளி மாணவி மதுதீஷா பாராகிளைடர் மூலம் பறந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் செய்திகள்
சித்திரை திருவிழா இன்று தொடக்கம்: அழகர்கோயில் வளாகத்தில் நாளை சுவாமி புறப்பாடு
பஸ்களை நிறுத்த, தங்க வசதியில்லாததால் பஸ் மேற்கூரையில் தூங்கிய டிரைவர், கண்டக்டர்கள்
இரவு நேர ஊரடங்கு எதிரொலி: கரூரில் பல கோடி ரூபாய் ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு..! ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு
கொரோனா தொற்றால் நெல்லையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்
801 வகையான பயன்பாட்டு பொருட்களை அளிக்கும் பனைமரம்: கருப்பட்டியை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை.!!!
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக பள்ளிகளே திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!
22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்