சீர்காழி காவல் நிலையம் அருகே பெரியார் சிலை அவமதிப்பு
2021-03-06@ 00:56:47

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு இரும்பு கூண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டிருப்பதை பார்த்து பெரியார் திராவிட கழகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெரியார் சிலைக்கு வைக்கப்பட்டிருந்த குங்கும பொட்டு மற்றும் மாலையை அகற்றினர். இதையடுத்து பெரியார் சிலையின் கூண்டை பூட்டு போட்டு போலீசார் பூட்டினர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவமதிப்பு செய்த நபர் குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கொள்ளையரிடம் இருந்து மீட்கப்பட்ட 1,382 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவு ரூ.48 லட்சம் மோசடி வழக்கில் மாமியார், மருமகன் கைது: பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகை
நண்பரை கொலை செய்த வாலிபர் கைது மது போதையில் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டதால் அடித்து கொன்றேன்: பரபரப்பு வாக்குமூலம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது
ஆபாச வீடியோவை வெளியிடுவதாக இளம்பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: முன்னாள் காதலன் கைது
ரயில், விமான பயணத்திற்காக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் போலியாக தயாரித்து மோசடி: வாலிபர் கைது
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்