கோ-வின் செயலியில் மூத்த குடிமக்கள் ஆர்வம்: கொரோனா தடுப்பூசிக்காக 50 லட்சம் பேர் முன்பதிவு
2021-03-03@ 00:29:18

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. அரசு உருவாக்கியுள்ள கோ-வின் செயலியில் கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொள்பவர்கள் தாங்களாகவே தங்களின் விவரங்களை பதிவிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்கான முன்பதிவு நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது. இதனை தொடர்ந்து, ஏராளமானோர் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதிலும் 50 லட்சம் பேர், இந்த செயலியில் முன்பதிவு செய்துள்ளனர். நேற்று பிற்பகல் வரை 60 வயது மற்றும் 45-60 வயதுடைய 2 லட்சத்து 8 ஆயிரத்து 791 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் இருந்து கடத்திய 100 கோடி கஞ்சா பறிமுதல்: லாரிக்கு அடியில் ரகசிய அறைகள்
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 18 வயதுக்கு மேற்பட்டோர் 28 முதல் பதிவு செய்யலாம்: மத்திய அரசு அறிவிப்பு
எல்லையை சுதந்திரமாக கடக்க அனுமதிக்க வேண்டும் ஆக்சிஜன் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
கொரோனா ஓடியது எடியூரப்பா டிஸ்சார்ஜ்
காஷ்மீரில் ஊடுருவ முடியவில்லை பஞ்சாப் மாநில எல்லையை குறி வைக்கும் தீவிரவாதிகள்: 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு
மருத்துவ ஆக்சிஜனை தயாரித்து வழங்குவதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி கருத்து
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!