கேளம்பாக்கம் அருகே பரபரப்பு தொழிலதிபர் ஓடஓட வெட்டிக் கொலை: கூலிப்படைக்கு போலீஸ வலைவீச்சு
2021-03-03@ 00:17:12

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே தொழிலதிபர் ஓடஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சென்னை கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் பெரிய தெருவை சேர்ந்தவர் பொன்னப்பன் (48). இவர், அரிசி ஆலை மற்றும் வணிக வளாகம் நடத்தி வந்தார். இவரது மனைவி திருமலை தேவி (45). இவர்களுக்கு தீபிகா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னப்பன், பொன்மார் கிராமத்தில் வேங்கடமங்கலம் பகுதியில் நடந்த உறவினரின் திருமண விருந்துக்கு சென்றுவிட்டு, பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது நான்கு முனை சந்திப்பு அருகே வந்தபோது, அவரை வழி மறித்த 2 பேர், ஒரு முகவரியைக் காட்டி வழி கேட்பதுபோல பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென அங்கு வந்த 2 பேர், பொன்னப்பனை கீழே தள்ளி சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய பொன்னப்பனை, மர்ம நபர்கள் விரட்டி சென்று ஓட ஓட வெட்டினர். இதில் தலை, முகம், கழுத்து, முதுகு உள்பட பல இடங்களில் வெட்டு விழுந்ததில் அவர் மயங்கி விழுந்தார். கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்நிலையில் பொன்னப்பனை மீட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பொன்னப்பனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து, தாழம்பூர் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பொன்னப்பனுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரிந்தது. அதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர். இவர்கள் கூலிப்படையாக இருக்கலாம் என்று போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.
மேலும் செய்திகள்
வெளியுறவுத்துறை அமைச்சக தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய வாலிபர் கைது: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா? போலீஸ் தீவிர விசாரணை
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது
மோட்டார் திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி
சண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரருக்கு சரமாரி அடி உதை: வாலிபர் கைது
சுங்கத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது: ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்த இருவருக்கு வலை
செல்போனை பறித்து அடைத்து வைப்பு பின்னலாடை நிறுவனத்தில் 19 பெண் தொழிலாளர் மீட்பு
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்