பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை
2021-03-02@ 10:07:43

டெல்லி: தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைப்பது குறித்து நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது.
இதனால் உலக சந்தையில் குறைந்த கச்சா எண்ணெய் விலையின் நன்மைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு பதிலாக மத்திய அரசு கடந்த 12 மாதங்களில் 2 முறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை உயர்த்தியது.
இந்நிலையில் உலக சந்தையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினம் ஒரு உச்சத்தை அடைந்து நுகர்வோருக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. டீசல் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் தற்போது நுகர்வோர் மீதான வரிச்சுமையை சற்று குறைக்கும் விதமாக பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்கும் நடவடிக்கைகளை நிதியமைச்சகம் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகள், பெட்ரோலிய அமைச்சகம், பெட்ரோலிய நிறுவனங்களுடன் மத்திய அரசு பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைகளுக்கு பிறகு இம்மாத மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை.!!!
கொரோனா தாக்கம் எதிரொலி: ராகுல், மம்தாவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரையை ரத்து செய்தார் பிரதமர் மோடி.!!!
கர்நாடகாவில் நிலைமை கை மீறிபோய்விட்டது..! கொரோனாவில் இருந்து 2வது முறையாக குணமடைந்த முதல்வர் எடியூரப்பா பேட்டி
பெங்களூருவில் கொரோனாவால் தினமும் சுமார் 100 பேர் உயிரிழப்பு: மயானங்களில் குவியும் உடல்கள்
விமானங்களை பயன்படுத்துங்க: மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு.!!!
இந்தியாவில் தயாராகிறது மேலும் ஒரு தடுப்பூசி : இறுதிக்கட்ட சோதனையில் பயோலொஜிக்கல் -இ தடுப்பூசி!!
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!
22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்