மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் வழங்கினார்
2021-03-02@ 00:42:16

மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சத்தியசாய் ஏற்பாட்டில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான நேற்று, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து, அவர்களுக்கு தேவையான ஆடை உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினார். உடன், மதுராந்தகம் நகர செயலாளர் குமார் உள்ட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர். இதேபோல் செய்யூர் பஜார் பகுதியில், திமுக ஆதரவாளர் கே.டி.ஆர் (எ) கு.தியாகராஜன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து இருளர் குடும்பங்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால்தான் 7 நோயாளி இறப்பு: திடுக்கிடும் தகவல்கள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 23ல் அமல்..! புதுச்சேரியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு
திருமணம் ஆகாமலேயே ஆசிரியை கர்ப்பம்: வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாய், குழந்தை உயிரிழப்பு: குழந்தை சடலம் கிணற்றில் வீச்சு
சீரான மும்முனை மின்சாரம் வழங்காததால் 70,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரின்றி கருகும் அவலம்: அரக்கோணம், நெமிலியில் விவசாயிகள் வேதனை
நாகை மாவட்டத்தில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள கட்டிடம் மீது பறந்த ட்ரோன்: சென்னையை சேர்ந்த 3 பேர் சிக்கினர்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 96 மர்ம காலி டிரங்க் பெட்டிகள்: தேனியில் பரபரப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்