கம்பம் சுருளி அருவியில் குளிக்க திடீர் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
2021-03-01@ 12:32:15

கம்பம்: சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுற்றுலா தலமான சுருளி அருவி கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 11 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி 26ஆம் தேதி நீக்கப்பட்டது.
ஒரு மாதமே ஆன நிலையில் அருவியில் நீராட வனத்துறையினர் திடீரென அனுமதி மறுத்தது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. குளிப்பதற்கு தடை விதித்துள்ளதால ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை மட்டுமே கண்டு ரசிக்கும் நிலை உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் ஏமாறுவதை தடுக்க முன்கூட்டியே அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:
சுருளி அருவிமேலும் செய்திகள்
முகக்கவசம் அணியாமல் சென்றதாக தமிழகம் முழுவதும் 4.60 லட்சம் வழக்குகள் பதிவு!: தமிழக காவல்துறை தகவல்
கொரோனா பரவல் எதிரொலி: சித்ரா பெர்ணமி அன்று திருவண்ணாமலையில் பக்தர்கள், பொதுமக்கள் கிரிவலம் செல்ல தடை
கருப்பு எள் கிலோ ரூ.8 உயர்ந்து ஏலம்-விவசாயிகள் மகிழ்ச்சி
திருவிழாக்கள் நடத்த அரசு அனுமதி மறுப்பால் பாதிப்பு தென்னங்கீற்று தொழிலாளர்கள் வறுமையில் வாடும் அவலநிலை
தாந்தோணிமலை அசோக் நகரில் வடிகாலின்றி சாலையோரம் ஓடைபோல் ஓடும் கழிவுநீர்
கரூர் வாங்கல் சாலையில் தாழ்வாகவுள்ள நகராட்சி குப்பை கிடங்கு சுற்றுச்சுவர்-காற்றில் குப்பைகள் பறக்கும் அவலம்
விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!
நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!