பெரம்பலூர் அருகே தனியார் பஞ்சு மில்லில் பயங்கர தீ: ரூ.2 கோடி பருத்தி எரிந்து சாம்பல்
2021-02-25@ 11:06:13

பாடாலூர்: பெரம்பலூர் அருகே தனியார் பஞ்சு மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பருத்தி மற்றும் பஞ்சு எரிந்து சேதமானது. பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமம் அருகே சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ். இவருக்கு சொந்தமாக பஞ்சு மில் உள்ளது. இங்கு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பருத்தியை அரைத்து பஞ்சு தனியாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மில்லில் இருந்து திடீரென தீ பிடித்ததால் தொழிலாளர்கள் அனைவரும் அலறி அடித்து வெளியே ஓடினர்.
தீ கொளுந்து விட்டு எரிந்ததால் பருத்தி மற்றும் பஞ்சு முற்றிலும் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் எனக்கூறப்படுகிறது. தகவலறிந்த பெரம்பலூர், வேப்பூர், ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 5 மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டன. இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வாணியம்பாடி 24வது வார்டில் மகளிருக்கான படிப்பகம் கட்டி தர வேண்டும்: கவுன்சிலர் கோரிக்கை
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் லாரிகள் நிறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம்: அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை
‘வளமான ஆலந்தூர்’ செயலி அறிமுகம்
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திடீர் தீ விபத்தில் 3 கடைகள் நாசம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்