டாலர் சிட்டியில் அதிமுகவில் கடும் மல்லுக்கட்டு
2021-02-25@ 05:10:21

கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்க உதவிய கொங்கு மண்டலம், தற்போது கவிழ்த்து விடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இம்முறை, அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு பெரும் இழுபறியாக இருக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும், நீலகிரியில் உள்ள மூன்று தொகுதிகளிலும் எந்த தொகுதியை எந்த கட்சிக்கு ஒதுக்குவது? யாருக்கு, எங்கே சீட் கொடுப்பது? என்பதெல்லாம் சுமூகமாக முடியும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளை ஒதுக்குவதில் கடும் முட்டல், மோதல் ஏற்படும் என்கிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்குள் முன்பு இருந்த ஒருங்கிணைப்பும், கட்சி விசுவாசமும் இப்போது இல்லை. அதற்கு காரணம், ஜெயலலிதா மறைவு மற்றும் சீனியர்கள் பலரும் ஆளுக்கொரு திசையில் பயணிப்பதுதான். பொள்ளாச்சியில் நிலைமை சரியில்லாமல் இருப்பதால், அங்கு தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன், இம்முறை திருப்பூர் வடக்கில் போட்டியிடுவார் என்று ஒரு தகவல் பரவுகிறது. இதே தொகுதிக்கு, கட்சியின் சீனியர்களான சிவசாமியும், முன்னாள் அமைச்சர் ஆனந்தனும் முட்டி மோதுகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயகுமாரும் ரேஸில் உள்ளார்.
இம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இம்முறை மீண்டும் உடுமலையில் நின்றால், கண்டிப்பாக தோற்றுவிடுவார் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. அதனால் அவரும், திருப்பூரை நோக்கி பயணத்தை துவக்கியுள்ளார். பல்லடம் தொகுதியை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் மகனுக்கு, பாரதிய ஜனதா கேட்கிறது. அதனால் அந்த தொகுதியிலும், திருப்பூர் தெற்கு தொகுதியிலும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் கிடைப்பது கடினம்தான் என்கிறார்கள். அவினாசி தொகுதியில் சபாநாயகர் தனபாலுக்கு பதிலாக அவருடைய மகனுக்கு சீட் கேட்கிறார்கள். ஆனால், தனபால் அளவுக்கு, அவரது மகனுக்கு வேலை பார்க்க இயலாது என கைவிரிக்கிறார்கள் கட்சி தொண்டர்கள்.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
மே. வங்கத்தில் ராகுலின் பிரசார கூட்டங்கள் ரத்து: மற்ற தலைவர்களுக்கும் அழைப்பு
புகைப்பிடிப்பதை ஒழிக்க நியூசிலாந்தின் திட்டத்தை இந்தியா பின்பற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்துக்கு அதிகளவு தடுப்பூசிகள்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தொடர்ந்து மறுக்கப்படும் உரிமைகள் இலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்
வாக்கு எண்ணும் மையம் அருகே நவீன வசதிகளுடன் கன்டெய்னர்: தென்காசி அருகே பரபரப்பு
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்