பாஜக மாநாட்டிற்காக சேலம் சென்றவர்கள் நாமக்கல்லில் சாப்பிட்டுவிட்டு தஞ்சையில் வந்து பணம் பெற்றுக்கொள்ளுமாறு கூறி தகராறு
2021-02-23@ 17:09:41

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு தஞ்சையில் வந்து பணம் பெற்றுக்கொள்ளுமாறு பாஜக வினர் கூறிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிசிடிவி ஆதாரத்துடன் கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தை என்ற இடத்தில் பார்வதி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த பகுதியிலேயே அவருக்கு 3 கிளைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சேலத்தில் பாஜக இளைஞர் அணி மாநாடு நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் அதிகமான பாஜகவினர் நகங்களில் அவ்வழியாக சென்றனர். அப்போது புதன்சந்தையில் நகங்களை நிறுத்தி ரூ. 5,000 பார்வதி ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்தவுடன் பணத்தை கொடுக்காமல் ஒவ்வொருவராக புறப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் அவர்களை மறித்து சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளனர். ஆனால் பாஜகவினர் பணம் கொடுக்காமல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பணம் வேண்டுமென்றால் தங்கள் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு கடை ஊழியர்களிடம் கூறிவிட்டு அவர்கள் புறப்பட்டு சென்றுவிட்டனர். இதனால் செய்வது அறியாத திகைத்த கடை உரிமையாளர் பார்வதி முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நல்லிபாளையம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பார்வதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பாஜக மாநாட்டிற்காக சேலம் சென்றவர்கள் நாமக்கல்லில் சாப்பிட்டுவிட்டு தஞ்சையில் வந்து பணம் பெற்றுக்கொள்ளுமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
ஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர்; தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர்: கமல் பரப்புரை
சென்னையில் தனியார் ஓட்டலில் அதிமுக-பாமக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 92,208 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்
கன்னியாகுமரியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் 15 கிலோ நகைகள் பறிமுதல்
விசிக சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.: திருமாவளவன்
சென்னையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநில வரித்துறை அதிகாரி கைது
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை புகார்.: விசாகா குழுவில் அதிகாரி மாற்றம்
தமாகா- அதிமுக இடையே விரைவில் தொகுதி உடன்பாடு எட்டப்படும்.: ஜி.கே.வாசன்
திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே நாளை பேச்சுவார்த்தை
திமுகவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது என இன்னும் உறுதி செய்யப்படவில்லை.: குண்டுராவ்
கோவை சூலூரில் பெட்ரோல் பங்கில் ரூ.1.1 கோடி கையாடல் செய்த மேலாளர் கைது
மக்கள் எங்களை நிராகரிக்கும் வரை நாங்கள் அரசியலில் இருப்போம்.: டிடிவி தினகரன்
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ்- ஈபிஎஸ்யிடம் சமர்ப்பித்தது தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.: 6 உயரதிகாரிகளிடமும் சிபிசிஐடி விசாரணை
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!