கோவாக்சினின் 3-ம் கட்ட சோதனை முடிவுகள் இரண்டு வாரத்தில் வெளியாகும்: பாரத் பயோடெக் நிறுவனம்
2021-02-23@ 15:53:13

டெல்லி: கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் 3-ம் கட்ட சோதனை முடிவுகள் இரண்டு வாரத்தில் வெளியாகும் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார். அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்ற சீரம் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்ட கடந்த ஜனவரி 3-ம் தேதியே கோவாக்சினுக்கும் அரசு ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தன.
முதற்கட்டமாக மருத்துவர் செவிலியர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 3-ம் கட்ட சோதனை நடக்காமல் கோவாக்சினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் 3 ஆம் கட்ட சோதனை முடிவுகள் இரண்டு வாரத்தில் வெளியாகும் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.
இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளை ஒன்றாக சேர்த்து நடத்தியிருந்தால் கோவாக்சினின் திறன் திட்டமிட்டபடி நிரூபிக்கப்பட்டிருக்கும். சில காரணங்களால் அது நடக்காமல் போய் விட்டது என கூறினார் தொடர்ந்து பேசிய அவர்; கோவாக்சின் தடுப்பூசி, தென்னாப்பிரிக்க மரபணு மாற்ற வைரசையும் கட்டுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுவதாக கூறினார்.
மேலும் செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் 14ம் தேதி முதல் முன்னுரிமை தரிசனம்: தலைமை செயல் அலுவலர் தகவல்
சபாநாயகர், 3 அமைச்சர்களுக்கும் தொடர்பு பினராய் உத்தரவுப்படியே டாலர் கடத்தல் செய்தோம்: சொப்னா பரபரப்பு வாக்குமூலம்
கிரிக்கெட் விளையாடிய சபரிமலை மேல்சாந்தி: சமூக வலைத்தளங்களில் வைரல்
மும்பையில் வெடிபொருட்களுடன் அம்பானி வீட்டருகே நின்ற காரின் உரிமையாளர் மர்மச்சாவு
கேரள லாட்டரியில் மேற்கு வங்க தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் பரிசு
அரசு விழாவுக்கு சகோதரரை அனுப்பிய பீகார் அமைச்சர்: முதல்வர் நிதிஷ் கொதிப்பு
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!