காங்கோவில் தீவிரவாதிகள் தாக்குதல் இத்தாலி தூதர் சுட்டுக் கொலை: ஐநா வாகன அணிவகுப்பில் பயங்கரம்
2021-02-23@ 00:44:56

கின்ஷசா: ஐநா. வாகன அணிவகுப்பின் போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், காங்கோவுக்கான இத்தாலி தூதர், இத்தாலி போலீஸ் அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டனர். ஐநா. உலக உணவு திட்டத்துக்கான வாகன அணிவகுப்பு காங்கோ நாட்டின் வடக்கு கிவுவில் உள்ள நைரன்காங்கோவின் கோமா பகுதியில் நடந்தது. அப்போது, தீவிரவாதிகள் மறைந்து இருந்து நடத்திய தாக்குதலில் காங்கோவுக்கான ஐநா தூதர் லூகா அட்டனாசியோ, இத்தாலி போலீஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி மாம்போ காவே கூறுகையில், இத்தாலி தூதரையும் சேர்த்து தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தில் 5 பேர் இருந்தனர்.
பலமுறை சுட்டதில் குண்டுகள் துளைத்து டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்தவர்கள் அருகில் இருந்த ஐநா. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது,’’ என்று கூறினார். கடந்த 2018ம் ஆண்டு, இதே பகுதியில்தான் 2 இங்கிலாந்து நாட்டவர்கள் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் கடத்தி செல்லப்பட்டனர். தற்போதும் இதே பகுதியில், ஐநா. வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சுற்றுலா பயணிகளை ஈர்க்க 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க ஹாங்காங் முடிவு
சிலி நாட்டில் வெப்பக்காற்று காரணமாக ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழப்பு.! மேலும் பலர் காயம் என தகவல்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.59 கோடியாக அதிகரிப்பு.! 67.69 லட்சம் பேர் உயிரிழப்பு
கடும் நெருக்கடிகளை தருகிறது ஐஎம்எப் மீது பாக். பிரதமர் குற்றச்சாட்டு
எச்1 பி விசா வரம்பினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பு
கடனை திருப்பி செலுத்துவதில் இலங்கைக்கு 2 வருட விலக்கு: சீனா உறுதி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!